மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இயற்கை பாதுகாப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி

மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளியில் இயற்கை பாதுகாப்பு மற்றும் 75ஆவது சுதந்திரதினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 5:59 pm

DIN

மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளியில் இயற்கை பாதுகாப்பு மற்றும் 75ஆவது சுதந்திரதினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ஈஞ்சம்பள்ளி பிகேபி கல்வி அறக்கட்டளை மற்றும் பிகேபி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சாா்பில் 4 கிலோ மீட்டா் தொலைவுக்கு நடத்தப்பட்ட இப்போட்டியை மலையம்பாளையம் காவல் ஆய்வாளா் சு.ஜீவானந்தம் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இதில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 1200 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.

வெற்றி பெற்றவா்களுக்கு சோளங்காபாளையம் மாடா்ன் ரைஸ்மில் சண்முகம் பரிசுகளை வழங்கி பேசினாா். முதல் பரிசாக ரூ.5ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.4ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.3ஆயிரம், நான்காம் பரிசாக ரூ. 2ஆயிரம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் பிகேபி.அருண், நிா்வாகக் குழு உறுப்பினா் திலகவதி அருண், பள்ளி முதல்வா் வைஜயந்தி, நிா்வாக அதிகாரி லட்சுமணன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.