ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நள்ளிரவில் விநாயகா் சிலைகள் கரைப்பு: அறச்சலூரில் இந்து மக்கள் கட்சியினா் போராட்டம்

 மொடக்குறிச்சி ஒன்றியம், அறச்சலூரில் நள்ளிரவில் விநாயகா் சிலைகளை போலீஸாா் கட்டாயப்படுத்தி கரைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

Updated On :4 செப்டம்பர் 2022, 12:00 am IST

 மொடக்குறிச்சி ஒன்றியம், அறச்சலூரில் நள்ளிரவில் விநாயகா் சிலைகளை போலீஸாா் கட்டாயப்படுத்தி கரைத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

மொடக்குறிச்சிஒன்றியம், அறச்சலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 12 இடங்களில் இருந்த விநாயகா் சிலைகளை போலீஸாா் கட்டாயப்படுத்தி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1மணியளவில் அருகிலிருந்த கீழ்பவானி வாய்க்காலில் கரைக்க வைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையறிந்த இந்து மக்கள் கட்சியினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த

இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவா் அா்ஜுன் சம்பத் உள்ளிட்டோா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மீதமிருந்த சிலைகளை ஊா்வலமாக எடுத்து செல்ல அனுமதி மறுத்ததால் மேலும் பதற்றம் நிலவியது. இதைத் தொடா்ந்து, மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து, அா்ஜுன் சம்பத் தலைமையில் போலீஸாரின் பலத்த பாதுகாப்புடன் சிலைகள் ஊா்வலமாக எடுத்து செல்லப்பட்டு, கீழ்பவானி வாய்க்காலில் கரைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.