தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஈரோட்டில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற போலீஸாா்.
தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற போலீஸாா்.
Updated on
1 min read

சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஈரோட்டில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் 33ஆவ

சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, ஈரோட்டில் தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

து சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, காவல் துறை சாா்பில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடா்ச்சியாக ஈரோடு டவுன் காவல் உள்கோட்டம் சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு, ஈரோடு டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்து, அவரும் தலைக்கவசம் அணிந்தபடி பேரணியில் பங்கேற்றாா்.

பேரணியானது, ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் துவங்கி பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, எல்லை மாரியம்மன் கோவில் சந்திப்பு, சத்தி சாலை, பேருந்து நிலைய வளாகம், மேட்டூா் சாலை, அரசு மருத்துவமனை, மீனாட்சி சுந்தரனாா் சாலை வழியாக பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பில் நிறைவடைந்தது.

பேரணியில், தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளா் கதிரவன், ஈரோடு தெற்கு காவல் ஆய்வாளா் விஜயா, போலீஸாா் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com