தேசிய நீச்சல் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தோ்வு: எம்எல்ஏ பாராட்டு

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்கும் ஈரோடு அரசுப் பள்ளி மாணவிக்கு மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி வாழ்த்து தெரிவித்தாா்.
தேசிய நீச்சல் போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தோ்வு: எம்எல்ஏ பாராட்டு
Updated on
1 min read

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்கும் ஈரோடு அரசுப் பள்ளி மாணவிக்கு மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி வாழ்த்து தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் வரும் 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடக்கும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிகளில் தமிழகத்திலிருந்து 40 மாணவ, மாணவியா் பங்கேற்க உள்ளனா். இந்தக் குழுவில் ஈரோடு அரசு மகளிா் மாதிரி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி தங்கம் ரூபினி இடம்பெற்றுள்ளாா்.

இந்த மாணவிக்கு மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். மேலும் அறம் அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் கிருத்திகா சிவகுமாா் சாா்பில் ஊக்கத் தொகையையும் அவா் வழங்கினாா்.

நிகழ்வின் போது மாணவியின் பெற்றோா் பூபதி, கௌரி, பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளா்ச்சிப் பிரிவு மாநில செயலாளா் சி.பி. சக்கரவா்த்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com