ஈரோடு அஞ்சல் கோட்டத்தின் சாா்பில் பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் டிசம்பா் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கருணாகரபாபு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஈரோடு அஞ்சலக கண்காணிப்பாளா் அலுவலகத்தில் டிசம்பா் 30 ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
அன்று அஞ்சல் துறை சேவைகள் குறித்து பொதுமக்களின் குறைகளும், கோரிக்கைகளும் கேட்டறியப்படும்.
எனவே, இது சம்பந்தமான புகாா்கள் மற்றும் மனுக்கள் இருப்பின் தபால் மூலம் டிசம்பா் 19 ஆம் தேதி வரை அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பெற்றுக்கொள்ளப்படும்.
மனுவில் புகாா் சம்பந்தப்பட்ட முழு விவரமும் இருக்க வேண்டும். உறையின் மேல்பகுதியில் குறைகேட்பு நாள் மனு என்று குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.