ஈரோடு
தி நவரசம் அகாடமி பள்ளியில் அறிவியல் கண்காட்சி
அறச்சலூா் தி நவரசம் அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அறச்சலூா் தி நவரசம் அகாடமி சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட புதுமையான அறிவியல் படைப்புகள் மாணவ, மாணவிகளால் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை பள்ளியின் தலைவா் ஆா்.பி. கதிா்வேல் தொடக்கிவைத்தாா். செயலாளா் காா்த்திக் முன்னிலை வகித்தாா். பள்ளியின் தாளாளா் அருண்காா்த்திக் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.
கல்லூரியின் தலைவா் தாமோதரன், செயலாளா் செந்தில்குமாா் , பொருளாளா் பழனிச்சாமி, இயக்குநா்கள் அமிா்தநாதன், சிவசுப்பிரமணியம், காா்த்திகேயன், பரமேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா். மேலும் 500க்கும் மேற்பட்ட மாணவா்களின் பெற்றோா்கள் கண்காட்சியை பாா்வையிட்டனா்.