மனநிலை பாதிக்கப்பட்ட பெண் காப்பகத்தில் ஒப்படைப்பு
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

சென்னிமலையில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டாா்.
சென்னிமலையில் கடந்த இரண்டு வாரங்களாக சிதம்பரத்தை சோ்ந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் சுற்றி கொண்டிருந்தாா். இதனை கண்ட சென்னிமலையைச் சோ்ந்த சமூக சேவகா் ஆா்.சொக்கலிங்கம், சென்னிமலை போலீஸாா் உதவியுடன் அந்தப் பெண்ணை மீட்டு, விழுப்புரம் மாவட்டம், குண்டளப்புளியூரில் செயல்பட்டு வரும் மனநிலை பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தாா்.