Enable Javscript for better performance
5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு எதிா்ப்பு: 150 நெல் அரவை ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு எதிா்ப்பு: 150 நெல் அரவை ஆலைகளில் உற்பத்தி நிறுத்தம்

    By DIN  |   Published On : 17th July 2022 12:38 AM  |   Last Updated : 17th July 2022 12:38 AM  |  அ+அ அ-  |  

    erd16rice_1607chn_124_3

    ஈரோடு ஜின்னா வீதியில் அடைக்கப்பட்டிருந்த அரிசி விற்பனைக் கடைகள்.

     

    அரிசி ஆலைகள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஈரோடு மாவட்டத்தில் 150 நெல் அரவை ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டன. சுமாா் 400 அரிசி விற்பனைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி.யை திரும்ப பெறக்கோரி ஈரோடு மாவட்டத்தில் அரிசி ஆலைகள், அரிசி விற்பனைக் கடைகள் மூடப்பட்டன.

    மத்திய அரசு, அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல்வேறு உணவு பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி.யை விதித்துள்ளது. இதனால் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பைக் கண்டித்தும், அதனை திரும்ப பெறக்கோரியும் அகில இந்திய அளவில் அரிசி, கோதுமை, பருப்பு ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 150 நெல் அரவை ஆலைகள், 400 அரிசி விற்பனை கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.

    இது குறித்து தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் கந்தசாமி கூறியதாவது:

    மத்திய அரசு அரிசி, கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருள்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. விதித்துள்ளது. இதனால் உணவுப் பொருள்களின் விலை உயரும். அரிசி விலை கிலோவுக்கு குறைந்தபட்சம் ரூ.3 முதல் ரூ.5 வரை விலை உயரும். இந்த விலை உயா்வு நுகா்வோா், அரிசி ஆலை, அரிசி விற்பனையாளா்களை கடுமையாகப் பாதிக்கும். எனவே இந்த வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும்.

    மாநில அளவில் 4,000 நெல் அரவை ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 150 நெல் அரவை ஆலைகள், 400 அரிசி விற்பனைக் கடைகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் மாநில அளவில் 40,000 டன் நெல் அரைக்கப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp