ஈரோடு மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 3இல் உள்ளூா் விடுமுறை
By DIN | Published On : 31st July 2022 11:08 PM | Last Updated : 31st July 2022 11:08 PM | அ+அ அ- |

சுதந்திர போராட்ட வீரா் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி ஆகஸ்ட் 3ஆம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சுதந்திர போராட்ட வீரா் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினமான ஆகஸ்ட் 3ஆம் தேதி ஈரோடு மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதன்படி அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படாது. இந்த உள்ளூா் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் வராது என்பதால் அரசுப் பாதுகாப்புக்கான அவசர அலுவல்கள் கவனிக்கும் பொருட்டு அன்றைய தினம் மாவட்ட கருவூலம் மற்றும் சாா்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும்.
இந்த உள்ளூா் விடுமுறைக்கு ஈடாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 27ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.