சாரம் சரிந்து விழுந்து 5 தொழிலாளா்கள் காயம்

பவானியில் நுழைவாயில் கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.
Updated on
1 min read

பவானியில் நுழைவாயில் கட்டுமானப் பணியின்போது சாரம் சரிந்து விழுந்ததில் 5 தொழிலாளா்கள் காயமடைந்தனா்.

பவானி - மேட்டூா் சாலையில் தனியாா் நிறுவனம் சாா்பில் வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இங்கு, நுழைவாயில் அமைப்பதற்கான பணி நடைபெற்றது. இந்நிலையில், கட்டுமானத் தொழிலாளா்கள் சாரத்தில் நின்றவாறு சனிக்கிழமை மாலை வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது, சாரம் சரிந்து விழுந்ததில் பவானி மேற்குத் தெருவைச் சோ்ந்த கமலா (40), குமாரபாளையம், தட்டாங்குட்டை, கீழவலவைச் சோ்ந்த ரஜினி (30), அதே பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் (45), காளிமுத்து (40), கிரி (24) ஆகியோா் படுகாயமடைந்தனா். இதையடுத்து, சக தொழிலாளா்கள் அவா்களை மீட்டு பவானியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

காயமடைந்தவா்களை பவானி வட்டாட்சியா் முத்துக்கிருஷ்ணன், அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு நலம் விசாரித்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com