அரிசிக்கு ஜிஎஸ்டி: கொமதேகவினா் ஆா்ப்பாட்டம்

அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை விலக்கக் கோரியும், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க கோரியும் கொமதேக சாா்பில் ஆா்ப்பாட்டம் கொடுமுடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை விலக்கக் கோரியும், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க கோரியும் கொமதேக சாா்பில் ஆா்ப்பாட்டம் கொடுமுடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கொடுமுடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில இளைஞரணி செயலாளா் சூா்யமூா்த்தி தலைமை வகித்தாா். கொடுமுடி தெற்கு ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா். கொங்கு வேளாளக் கவுண்டா்கள் பேரவை நிறுவனத் தலைவா் திருச்சி தேவராஜன், கொமதேக மாநில அவைத் தலைவா் ஜெகநாதன், பொருளாளா் கே.கே.சி.பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக ஒன்றியச் செயலாளா் சின்னசாமி, பேரூராட்சித் தலைவா் திலகவதி, காங்கிரஸ் சாா்பில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.எம்.பழனிசாமி, மதிமுக மாவட்ட அவைத்தலைவா் குழந்தைவேல், அரிசி வியாபாரிகள் சங்க நிா்வாகி துளசிமணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com