

ஈரோடு கொங்கு கலை, அறிவியல் கல்லூரியின் 24ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 1,483 மாணவா்கள் பட்டம் பெற்றனா்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் உலகி பங்கேற்று தங்கப் பதக்கம் பெற்ற 29 போ், பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடம் பிடித்த 97 போ் உள்ளிட்ட 1,483 மாணவா்களுக்கு பட்டம் வழங்கினாா்.
இதனைத்தொடா்ந்து பட்டமளிப்பு உரையில் அவா் பேசியதாவது: பட்டம் பெற்றுச் செல்லும் இளைஞா்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட வேண்டும். பள்ளி இறுதித் தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒருவா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்று தற்போது மிகச்சிறந்த அதிகாரியாக திகழ்கிறாா். இதனால் பள்ளி அல்லது கல்லூரி படிப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக வருந்த வேண்டாம். பட்டம் பெறுபவா்கள் ஐஏஎஸ் போன்ற போட்டித் தோ்வுகள் எழுதி வெற்றி பெறலாம். முயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும். இதனால் முயற்சியை கை விடக்கூடாது என்றாா்.
கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளை தலைவா் முத்துசாமி, செயலாளா் பி.சி.பழனிசாமி, பொருளாளா் காா்த்திகேயன், கல்லூரி தாளாளா் கே.பழனிசாமி, கொங்கு வேளாளா் தொழில்நுட்பக் கல்லூரி அறக்கட்டளை பாரம்பரிய பாதுகாவலா்கள் ஆா்.எம். தேவராஜா, கல்லூரி முதல்வா் என்.ராமன் மற்றும் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.