சத்தியமங்கலத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2 கோடியே 65 லட்சம் கடனுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் சத்தியமங்கலம் வட்டாரத்தில் அனைத்து வங்கிகளும் ஒருங்கிணைந்து கடன் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், 35 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு 2 கோடியே 65 லட்சம் கடன் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவா் கே.சி.பி. இளங்கோ தலைமை வகித்தாா்.
துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (பொது) எஸ்.செந்தில்குமாா், மகளிா் சுய உதவிக் குழு வட்டார இயக்க மேலாளா் இந்திரா, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, பிஏசிஎஸ் வங்கி, பேங்க் ஆப் இந்தியா மேலாளா்கள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.