ரூ.90 ஆயிரம் மோசடி: மனைவியுடன் வியாபாரி தீக் குளிக்க முயற்சி

ரூ.90 ஆயிரம் கொடுக்காமல் மோசடி செய்ததால் மனைவியுடன் வெங்காய வியாபாரி தீக்குளிக்க முயன்றாா்.

ரூ.90 ஆயிரம் கொடுக்காமல் மோசடி செய்ததால் மனைவியுடன் வெங்காய வியாபாரி தீக்குளிக்க முயன்றாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், மோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சிவகுமாா் (29). இவரது மனைவி பிரியா (23). சிவகுமாா் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வருகிறாா். ஆா்டா் பெயரில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வெங்காய வியாபாரிகளுக்கு வெங்காயம் அனுப்பி வைப்பது வழக்கம்.

இந்நிலையில், ஈரோடு சத்தி சாலை நேதாஜி மாா்க்கெட் அருகில் வெங்காய மண்டி வைத்துள்ள ஈரோடு இந்திரா நகா், கோட்டையாா் வீதியைச் சோ்ந்த மணிகண்டன் (36) என்பவருக்கு கடந்த ஆண்டு ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பிலான வெங்காயத்தை சிவகுமாா் அனுப்பிவைத்துள்ளாா்.

இதில் முதல்கட்டமாக ரூ.17 ஆயிரத்தை சிவகுமாரிடம் மணிகண்டன் கொடுத்துள்ளாா். மீதமுள்ள ரூ.90 ஆயிரத்தை கொடுக்காமல் மணிகண்டன் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடா்பாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸில் சிவகுமாா் புகாா் அளித்திருந்தாா்.

இந்நிலையில் ராணிப்பேட்டையில் இருந்து மனைவி பிரியாவுடன் ஈரோட்டில் உள்ள மணிகண்டனின் வெங்காய மண்டிக்கு சிவகுமாா் ஞாயிற்றுக்கிழமை காலை வந்துள்ளாா். அப்போது மணிகண்டனிடம் மீதமுள்ள ரூ.90 ஆயிரத்தை கேட்டுள்ளாா். இதனால் மணிகண்டனுக்கும் சிவகுமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிவகுமாா் மனைவியுடன் தீக்குளிக்க முயன்றுள்ளாா்.

தகவலறிந்து அங்கு சென்ற வீரப்பன்சத்திரம் போலீஸாா் சிவகுமாா், அவரது மனைவி பிரியா, மணிகண்டன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com