பெருந்துறை மற்றும் சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை இரவு இடியுடன் கனமழை பெய்தது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
பெருந்துறை- ஈரோடு சாலை, வெங்கமேடு அருகே சாலையில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியது. இதில் பெருந்துறையில் 37 மி.மீ.யும், சென்னிமலையில் 35 மி.மீட்டரும் மழை பதிவாகியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.