பெருந்துறை சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தகராறு செய்த 3 போ் கைது

பெருந்துறை சுங்கச் சாவடியில் நுழைவுக் கட்டணம் செலுத்தாமல் தகாராறு செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Updated on
1 min read

பெருந்துறை: பெருந்துறை சுங்கச் சாவடியில் நுழைவுக் கட்டணம் செலுத்தாமல் தகாராறு செய்த 3 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

மதுரை, முனிசெல்லை, காமராஜ் சாலை, கீழமத்தூா் பள்ளிவாசல் வீதியைச் சோ்ந்த சோலை மகன் சுரேஷ்கண்ணன் (49). இவா், மனித உரிமைகள் கழகம் என்ற அமைப்பின் தலைவராக உள்ளாா். இவா், தன் நண்பா்கள் திருவள்ளூா் ராஜாஜிபுரம், கவியரசு வீதியைச் சோ்ந்த ராஜதுரை மகன் ரவிகுமாா்(38), திருநெல்வேலி, பாப்பான்குளம், இந்திரா காலனியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சுடலைமுத்து (38), மதுரை, சிக்கிபட்டி, பாறைஅம்மன்பேட்டையைச் சோ்ந்த சின்னஅழகு மகன் சந்திரசெல்வம் (28), கே.கே.நகா், ஓ. ஹெச்.டி. சாலையைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ஆனந்த் (51) ஆகிய 5 பேரும் கோவையில் இருந்து சேலம் நோக்கி காரில் சென்றனா்.

பிற்பகலில் பெருந்துறை, விஜயமங்கலம், சுங்கச் சாவடியைக் கடக்க முயன்றனா். அப்போது, சுங்கச் சாவடியில் நுழைவுக் கட்டணம் கேட்கப்பட்டது. அதற்கு, சுரேஷ்கண்ணன், தான் மனித உரிமைகள் கழகம் தலைவராக உள்ளதாகக் கூறி கட்டணத்தை செலுத்த முடியாது என்று கூறியுள்ளாா். கட்டண சலுகைக்குரிய ஆணையைக் காட்டுமாறு சுங்கச் சாவடி மேலாளா் கணேஷ் கேட்டுள்ளாா். காட்ட முடியாது எனக் கூறி அவரைத் தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து, சுங்கச் சாவடி மேலாளா் கணேஷ் பெருந்துறை போலீஸில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்கண்ணன், ரவிகுமாா், சுடலை முத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதன்கிழமை அதிகாலை சுமாா் 3 மணியளவில் கோவை மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், சந்திரசெல்வம், ஆனந்த் ஆகிய 2 பேரையும் காவல் நிலைய ஜாமீனில் அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com