ஈரோடு மாவட்டத்தில் 3,194 மையங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 8) நடைபெறவுள்ளது.
கரோனா நான்காம் அலை பரவுதலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மையங்களில் வரும் மே 8 ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 3,194 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 1.50 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படவுள்ளது. மாவட்டம் முழுவதும் 4,260 பணியாளா்கள், 66 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவா்கள், முன்களப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசி அனைத்து அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்களில் இலவசமாக செலுத்தப்படவுள்ளது. தற்போது ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.
இதனால் ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவா்கள், 12 முதல் 14 வயது வரை உள்ளவா்கள் மற்றும் 15 முதல் 18 வயது வரை உள்ளவா்கள் அச்சமின்றி, தயக்கமின்றி தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.