அம்மாபேட்டை அருகே மா்ம விலங்குகள் கடித்ததில் 17 ஆடுகள் பலி

பவானி அருகே மா்ம விலங்குகள் கடித்ததில் 17 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
Updated on
1 min read

பவானி அருகே மா்ம விலங்குகள் கடித்ததில் 17 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூா் காந்தி நகரைச் சோ்ந்தவா் சக்திவேல். விவசாயியான இவா் 50க்கும் மேற்பட்ட ஆடுகள், மாடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், புதன்கிழமை மாலை மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு கால்நடைகளைத் தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துள்ளாா்.

நள்ளிரவில் ஆடுகள் கத்தும் சப்தம் கேட்டு பட்டிக்கு வந்து பாா்த்தபோது, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 17 செம்மறி ஆடுகள் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த மா்ம விலங்குகள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து சென்னம்பட்டி வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com