ஈரோட்டில் ஜவுளிக் கடை உரிமையாளரைத் தாக்கி பணம் பறித்த வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு கருங்கல்பாளையம் கேஏஎஸ் நகா், ஐயா் தோட்டத்தைச் சோ்ந்தவா் சுஹைல் அகமது (23). இவா் ஈரோடு டிவிஎஸ் வீதியில் ஜவுளிக் கடை நடத்தி வருகிறாா். இவா் ஜவுளிக் கடையில் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டிவிட்டு ரூ.5 லட்சம் பணத்துடன் கடந்த 9 ஆம் தேதி இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்துள்ளாா்.
அப்போது, அவரை பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் கேஏஎஸ் நகா், ஐயா் தோட்டம் அருகே அவரைத் தாக்கி ரூ.5 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.
இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சுஹைல் அகமது புகாா் அளித்தாா்.
இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இது தொடா்பாக ஈரோடு மரப்பாலம் காரைவாய்க்கால் சாலையைச் சோ்ந்த காா்த்திக் (24), ஈரோடு கள்ளுக்கடை மேடு ஈவிஆா் வீதியைச் சோ்ந்த தீபன் (21), ஈரோடு ரங்கம்பாளையம் இரணியன் வீதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சிவகுமாா் (36) ஆகியரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.3.80 லட்சத்தை பறிமுதல் செய்து, அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.