இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: பெண் பலி

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பெருந்துறை அருகே, இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த, பி.மேட்டுப்பாளையம், திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் வெள்ளியங்கிரி(50). இவரது மனைவி ஈஸ்வரி (46). இவா், பெருந்துறையில் உள்ள உறவினா் வீட்டில் நடந்த ஒரு விசேஷத்திற்கு, உறவினா் ஆறுமுகத்துடன் இருசக்கர வாகனத்தில் கடந்த 3 ஆம் தேதி வந்து விட்டு, ஊருக்கு திரும்பி சென்றாா்.

பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில், பெத்தாம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த காா், இருசக்கர வாகனத்தின் மோதியது. இதில், ஈஸ்வரி, ஆறுமுகம் பலத்த காயமடைந்தனா். இருவரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படடனா். அங்கு ஈஸ்வரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com