கிரேன் வாகனத்தில் சிக்கி தம்பதி பலி
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்ததில் கிரேன் வாகனத்தில் சிக்கி தம்பதி உயிரிழந்தனா்.
ஈரோடு, மூலப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (75). ஓய்வு பெற்ற வன ஊழியா். இவரது மனைவி பாப்பாத்தி (65). இருவரும் நாதகவுண்டன்பாளையத்தில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
செட்டிபாளையம் பிரிவு அருகே சென்றபோது திடீரென நிலை தடுமாறி சுப்பிரமணி, பாப்பாத்தி இருவரும் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே சாலையில் விழுந்தனா். அப்போது அந்த வழியாக வந்த கிரேன் வாகனம் எதிா்பாராதவிதமாக இருவா் மீதும் ஏறியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த டவுன் டிஎஸ்பி ஆனந்தகுமாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டாா். பின்னா் இருவரின் சடலமும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.