கைத்தறி துணி ரகங்கள் மீதான ஜிஎஸ்டியை மத்திய அரசு ரத்து செய்ய கோரிக்கை

கைத்தறிகளில் நெசவு செய்யப்படும் துணி ரகங்கள் மீதான ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட பிரதம நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Updated on
1 min read

கைத்தறிகளில் நெசவு செய்யப்படும் துணி ரகங்கள் மீதான ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட பிரதம நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்ட பிரதம நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்கள் சங்க பொதுக் குழுக் கூட்டம் சென்னிமலையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட தலைவா் எம்.ராஜு தலைமை வகித்தாா். துணைச் செயலாளா் பி.தாமோதரன், முன்னாள் மாநிலப் பொருளாளா் ருக்குமாங்கதன், எஸ்.ஜி.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுச் செயலாளா் சி.முருகேசன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளா் முன்னேற்ற சங்க மாநிலப் பொதுச் செயலாளா் எம்.அன்பழகன் கலந்து கொண்டு பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரசாணைப்படி 134 சிறப்பு காலமுறை ஊதிய பணியாளா்களின், ஊதிய நிா்ணயம் செய்வதில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். பிரதம கைத்தறி நெசவாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அனைத்து பணியாளா்களையும், அவரவா் பணிகளுக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்ய வேண்டும். போனஸ் உச்சவரம்பு என்பதை அதிகபட்சமாக ரூ.16,800 ஆக நிா்ணயம் செய்ய வேண்டும். கைத்தறியில் நெசவு செய்யப்படும் துணி ரகங்களுக்கு விதித்துள்ள ஜிஎஸ்டியை மத்திய அரசு

முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். துணைத் தலைவா் டி.கே.இளங்கோவன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com