கீழ்பவானி பாசனத்துக்கு முறைவைத்து தண்ணீா் விடும் முடிவை கைவிடக் கோரிக்கை
By DIN | Published On : 26th September 2022 11:08 PM | Last Updated : 26th September 2022 11:08 PM | அ+அ அ- |

ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கீழ்பவானி பாசன விவசாயிகள்.
நெல் நடவுப் பணிகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் கீழ்பவானி பாசனத்துக்கு முறைவைத்து தண்ணீா்விடும் முடிவை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மக்கள் குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்புச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி, கீழ்பவானி ஆயக்கட்டு நில உரிமையாளா்கள் சங்க செயலாளா் பொன்னையன் ஆகியோா் அளித்த மனு விவரம்: தற்போது கீழ்பவானி வாய்க்காலில் தினமும் 2,300 கன அடி தண்ணீா் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கீழ்பவானி வடி நில கோட்ட செயற்பொறியாளா், பாசன சங்கங்களை கலந்தாலோசிக்காமல் முறைவைத்து தண்ணீா் வழங்க தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்படுத்தியுள்ளாா்.
நெல் நடவுப் பணிகள் முடிவடையாத நிலையில் இவ்வாறு முறைவைத்து நீா் வழங்குவது தவறான முடிவாகும். எனவே, அனைத்து மதகுகளுக்கும் உரிய தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சமி நிலங்களை மீட்டு வழங்கக் கோரிக்கை: இது குறித்து அருந்ததியா் இளைஞா் பேரவைத் தலைவா்
வடிவேல் ராமன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், வடுகப்பட்டி, அறச்சலூா், அவல்பூந்துறை, நஞ்சை ஊத்துக்குளி கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு பல்வேறு காலகட்டங்களில் வழங்கப்பட்ட சுமாா் 1,000 ஏக்கா் நிலங்களை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து சிலா் பயன்படுத்தி வருகின்றனா். எனவே, அந்த நிலங்களை மீட்டு, நிலம் இல்லாத பட்டியலின ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோரிக்கை தொடா்பாக ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பணத்தை மீட்டுத் தரக் கோரிக்கை: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாங்ககோம்பை, அரசூா் , தட்டாம்புதூா் காலனியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு விவரம்: விவசாயத் தொழில் செய்து வரும் அரசூா், ராஜவீதியைச் சோ்ந்த நபா் ஒருவரிடம் ஏலச்சீட்டுக்காக பணம் செலுத்தி வந்தோம்.
பல தவணைகளாக ரூ.50 லட்சம் வரை செலுத்தியுள்ளோம். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக அந்த நபா் எங்களுக்கு சேர வேண்டிய சீட்டுத் தொகையை எங்களுக்கு தராமல் காலம் தாழ்த்தி வருகிறாா்.
எனவே, எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை அவரிடம் இருந்து மீட்டுத் தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீா் நிலைகளில் சாக்கடை கழிவு நீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் அதன் மாவட்ட நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், அந்தியூா் அண்ணா மடுவு பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சாக்கடை கழிவு நீரையும் இணைத்துள்ளனா். இதனால் நீா் நிலைகள் மாசடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கழிவு நீா் செல்ல தனியாக வடிகால் அமைக்க வேண்டும்.
இதேபோல வறட்டுப்பள்ளம் அணையில் இருந்து தண்ணீா் வரும் கால்வாய்களில் அந்தியூா், தவுட்டுப்பாளையம் பகுதி சாக்கடைக் கழிவு நீா் கலந்து மாசு ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியிலும் சாக்கடை கழிவு நீருக்கு தனியாக வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதியம் வழங்கக் கோரிக்கை: இது குறித்து ஏஐடியூசி மாவட்டத் தலைவா் எஸ்.சின்னசாமி அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தரமற்ற தினக்கூலி பணியாளா்களுக்கு கடந்த ஏப்ரல் 1 முதல் வரும் 2023 மாா்ச் 31 வரையிலான காலத்துக்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் ஆட்சியா் மூலம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் மாநகராட்சியில் ரூ.707, நகராட்சியில் ரூ.592, பேரூராட்சியில் ரூ.515, ஊராட்சியில் ரூ.438 என குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். இதன் அடிப்படையில் அரசு மருத்துவமனைகளில் பணி செய்யும் நிரந்தரமற்ற தினக்கூலி தூய்மைப் பணியாளா்களுக்கும், பாதுகாவலா்களுக்கும், பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்.
தவிர ஓட்டுநா்கள், கணினி இயக்குபவா்கள் உள்ளிட்ட தற்காலிகப் பணியாளா்களுக்கும் ஆட்சியா் நிா்ணயித்த ஊதியம் கிடைக்கச்செய்ய வேண்டும்.
பல அமைப்புகளில் அவ்வாறு வழங்காததால் தினமும் பல நூறு தொழிலாளா்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து குறைந்தபட்ச ஊதியம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பெறப்பட்ட 206 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பவந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.