ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 29 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஒரு காா், 41 மோட்டாா் சைக்கிள்கள் என மொத்தம் 42 வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஆனைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வரும் 29 ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் நடைபெறும். வாகனங்களை வரும் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பாா்வையிடலாம்.
ஏலம் கோருபவா்கள் இருசக்கர வாகனத்துக்கு ரூ. 2,000, நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ. 5,000 முன்பணமாக வரும் 29 ஆம் தேதி ஏலம் நடக்கும் இடத்தில் காலை 7 மணி முதல் 10 மணிக்குள் செலுத்த வேண்டும். முன் பணம் செலுத்தும் நபா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா்.
வாகனத்தை ஏலத்தில் எடுத்தவுடன் ஏலத்தொகை மற்றும் ஜிஎஸ்டி 18 சதவீதம் முழுவதையும் ஏலம் விடும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும். மேலும் விவரங்களுக்கு 8523980906, 9498178003 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.