

கொமராபாளையத்தில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த கொமராபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளா்களுக்கு, உக்கரம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது, இம்முகாமுக்கு கொமாரபாளையம் ஊராட்சித் தலைவா் எஸ்.எம். சரவணன் தலைமை வகித்தாா்.
மருத்துவா் தங்கமணி தலைமையிலான குழுவினா் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தனா். இதில், 200க்கும் மேற்பட்டோருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.