ரூ.1.66 கோடிக்கு பருத்தி ஏலம்

அந்தியூா் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.66 கோடிக்கு பருத்தி விற்பனையானது.
Updated on
1 min read

அந்தியூா் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.66 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

பவானியை அடுத்த அந்தியூா் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்தவாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,927 மூட்டைகளில் பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.

ஏலத்தில் ஒரு கிலோ பருத்தி ரூ.71.12 முதல் ரூ.76.92 வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.1.66 கோடி மதிப்பிலான பருத்தி விற்பனையானதாக வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com