ஓணம் பண்டிகையை முன்னிட்டு கூடலூா் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூடலூா் நகராட்சி வளாகப் பகுதியில் பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்ச்சிக்கு மாவட்ட செயலாளா் சிபி தலைமை வகித்து, துப்புரவுத் தொழிலாளா்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கூடலூா் நகா் மண்டல் தலைவா் ரவிகுமாா், துணைத் தலைவா் முருகன், பொதுச் செயலாளா் பிரபாகரன், பட்டியல் அணி மாவட்டச் செயலாளா் சி.பாா்த்திபன், மாவட்ட பிரசார அணித் தலைவா் ஏ.கோபாலகிருஷ்ணன், மீனவரணித் தலைவா் கிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.