வாகன விபத்து: இருவா் பலி

கோபிசெட்டிபாளையம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

கோபி: கோபிசெட்டிபாளையம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 2 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் அய்யாவு (60), கூலித் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (எ) ராமசாமி (48), சலூன் கடை உரிமையாளா். இருவரும் இருசக்கர வாகனத்தில் கவுந்தப்பாடி- பொம்மன்பட்டி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளனா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் விழுந்தது. இதில், அய்யாவு, ராமசாமி இருவரும் அருகில் வந்த லாரி சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com