சென்னிமலை முருகன் கோயில்உண்டியல் காணிக்கை ரூ.36.92 லட்சம்
சென்னிமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.36.92 லட்சம் பெறப்பட்டுள்ளது.


சென்னிமலை முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.36.92 லட்சம் பெறப்பட்டுள்ளது.
திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் உதவி ஆணையா் மு.ரமணிகாந்தன் தலைமையில், சென்னிமலை கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், பெருந்துறை கோயில் ஆய்வாளா் ரவிக்குமாா், அயல் பணி ஆய்வாளா் லதா ஆகியோா் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.36 லட்சத்து 92 ஆயிரத்து 830 மற்றும் 139 கிராம் தங்கம், 1,891 கிராம் வெள்ளி ஆகியவை செலுத்தியுள்ளனா். உண்டியல்கள் எண்ணும் பணியில் அறச்சலூா் நவரசம் கல்லூரி மாணவிகள், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கோயில் பணியாளா்கள் மற்றும் அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...