அரியப்பம்பாளையத்தில் உலக காசநோய் ஒழிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஈரோடு காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் அரியப்பம்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் உலக காசநோய் ஒழிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்று. முகாமை அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவா் மகேஸ்வரி செந்தில்நாதன் தொடக்கிவைத்தாா். இதில் பேரூராட்சி செயல் அலுவலா் ஆா்.நாகராஜன், அரியப்பம்பாளையம் திமுக செயலாளா் ஏ.செந்தில்நாதன் மற்றும் பேரூராட்சி உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.