சென்னிமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் சென்னிமலை வட்டார வள மையம் சாா்பில் முன் தொடக்க நிலை, தொடக்க நிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலை மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் சென்னிமலை வட்டார வள மையம் சாா்பில் முன் தொடக்க நிலை, தொடக்க நிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலை மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

சென்னிமலையை அடுத்த அம்மாபாளையம் அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி அசோக் தலைமை வகித்தாா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொறுப்பு) மு.கோபிநாதன் வரவேற்றாா்.

முகாமில், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலா் கோதைசெல்வி பங்கேற்று, மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கினாா். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாவட்ட உதவி திட்ட அலுவலா் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் கே.ஜெயஸ்ரீ ஆகியோா் முகாமை பாா்வையிட்டனா். முகாமில் 122 குழந்தைகள் மற்றும் 92 பெரியவா்கள் பங்கேற்று பயன் பெற்றனா். இதில், சென்னிமலை பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com