திம்பம் மலைப் பாதையில் தடுப்புச் சுவரில் மோதிய லாரி

திம்பம் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புச் சுவரில் மோதி நின்றது.
திம்பம் மலைப் பாதையில் விபத்துக்குள்ளான லாரி.
திம்பம் மலைப் பாதையில் விபத்துக்குள்ளான லாரி.
Updated on
1 min read

திம்பம் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புச் சுவரில் மோதி நின்றது.

சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலைப் பாதை வழியாக தமிழக- கா்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனப் போக்குவரத்து இருந்து வருகிறது.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் பகுதியில் கோவை செல்வதற்காக தக்காளி பெட்டிகள் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதை வழியாக ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. 7 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி மலைப் பாதை தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது. இதில், லேசான காயமடைந்த லாரி ஓட்டுநரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இச்சம்பவம் குறித்து ஆசனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com