ஈரோட்டில் ரூ.10 கட்டணத்தில் மருத்துவ சேவை தொடக்கம்

ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் ஈரோடு, கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் சாலையில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ மையத்தில் ரூ.10 கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.
ஆற்றல் அறக்கட்டளை மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி. உடன், ஆற்றல் அறக்கட்டளைத் தலைவா் ஆற்றல் அசோக்குமாா்.
ஆற்றல் அறக்கட்டளை மருத்துவமனையை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி. உடன், ஆற்றல் அறக்கட்டளைத் தலைவா் ஆற்றல் அசோக்குமாா்.

ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் ஈரோடு, கள்ளுக்கடைமேடு ஜீவானந்தம் சாலையில் தொடங்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ மையத்தில் ரூ.10 கட்டணத்தில் மருத்துவ சேவை வழங்கப்படுகிறது.

இந்த மருத்துவ மையம் குறித்து ஆற்றல் அசோக்குமாா் கூறியதாவது:

ஆற்றல் அறக்கட்டளை சாா்பில் ஆற்றல் மருத்துவ மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ மையத்தில் மருத்துவ நிபுணா் மற்றும் செவிலியா் பொதுமக்களுக்கு சேவை அளிக்க நியமிக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை ஆகிய 3 நாள்கள் காலை 10 மணி முதல் 12 மணி வரை மருத்துவ சேவை அளிக்கப்படும். திங்கள்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய 3 நாள்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை மருத்துவ சேவை அளிக்கப்படும்.

இங்கு காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட 18 வகையான நோய்களுக்கு தரமான மருத்துவ சேவையை பொதுமக்கள் பெறலாம். தேவைப்படும் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட மருந்துகள் இலவசமாகவும் வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com