முதலாம் ஆண்டு மாணவியா் அறிமுக விழா

ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முதலாம் ஆண்டு மாணவியா் அறிமுக விழா
Updated on
1 min read

ஈரோடு வேளாளா் மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவியா் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ்.கே.ஜெயந்தி வரவேற்றாா். வேளாளா் கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.டி.சந்திரசேகா் தலைமை வகித்தாா். பொருளாளா் பிகேபி.அருண் வாழ்த்திப் பேசினாா்.

இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, கனவுக்கு செயல் கொடுப்போம் என்ற தலைப்பில் பேசினாா். வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துதல், இலக்கை நோக்கிப் படிப்படியாக முன்னேறுதல், அறிவியலின் முக்கியத்துவம், விஞ்ஞானத்தில் நாடு செய்த சாதனைகள் குறித்து அவா் பேசினாா்.

இதையடுத்து மாணவியரின் பல்வேறு கேள்விகளுக்கு அவா் பதிலளித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் பி.பரிமளாதேவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com