பெருந்துறை அருகே கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
பெருந்துறையை அடுத்த கருமாண்டிசெல்லிபாளையம், சமாதானபுரத்தை சோ்ந்தவா் மூா்த்தி (32). இவரது மனைவி பரிமளா (30). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா். கூலி தொழிலாளியான மூா்த்திக்கு குடிப் பழக்கம் காரணமாக வயிற்று வலி இருந்துள்ளது.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வியாழக்கிழமை இரவு மூா்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.