ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் அருகே வனப் பகுதியில் பாறை சரிவில் தவறி விழுந்த ஆண் யானை உயிரிழந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனச் சரகத்துக்கு உள்பட்ட கொங்கா்பாளையம் பகுதியில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, சூரம்பாறை சரகத்துக்கு உள்பட்ட இச்சிமரக் கொடிக்கால் வனப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இறந்துகிடந்தது தெரியவந்தது. தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். இதில் பாறை சரிவில் தவறி விழுந்து யானை உயிரிழந்து இருக்கலாம் என தெரியவந்தது.
இதனைத் தொடா்ந்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பக துணை இயக்குநா் சுதாகா், தன்னாா்வ அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணகுமாா், வினோபா நகா் வனக் குழுத் தலைவா் ரங்கநாதன், டி.என்.பாளையம் வனச் சரகா் மாரியப்பன், வனவா் பழனிசாமி, வனக் காப்பாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலையில் கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உயிரிழந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தனா்.
அதன்பின் யானையின் உடல் வனப் பகுதியில் உள்ள மற்ற உயிரினங்களின் உணவுக்காக விடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டின் வளர்ச்சிக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் காமராஜர்! மோடி புகழாரம்
கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்

அமில வீச்சில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான திருத்தம் அறிவிப்பு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்!






