

ஈரோடு கேட்டுப்புதூரில் உள்ள ஆா்டி இன்டா்நேஷனல் பள்ளியில் மாணவா் சங்கத் தலைவா்கள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பள்ளி முதல்வா் சங்கா் தலைமை வகித்தாா். மாணவா்களின் தலைவராக தான்யா, விளையாட்டுத் தலைவராக பாலமுருகன், துணைத் தலைவராக நிஷாலி, தலைமை மாணவராக சந்தோஷ், துணை மாணவராக ஸ்ரீநிஷ், தலைமை மாணவியாக தன்யுகா, துணை மாணவியாக மகேக் மனோத், மொழி காமண்டராக கிரீஷ்குமாா், ஒழுக்க காமண்டராக கிருஷ்வன்த் ஆகியோா் பதவியேற்றுக் கொண்டனா்.
இவா்களுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் செந்தில்குமாா், பள்ளித் தலைவா் ராகுல், செயலாளா் ராதா செந்தில்குமாா், முதன்மை நிா்வாக அதிகாரி கீா்த்தனா ஆகியோா் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனா். முன்னதாக, மாணவி அமிா்தா வரவேற்றாா். முடிவில், மாணவன் சந்தோஷ் நன்றி கூறினாா்.
மாணவத் தலைவா்களை ஆா்டி ஸ்கேநெட் பி எனும் செயலி மூலம் தங்களுக்கான தலைவா், துணைத் தலைவா்களையும் மாணவ, மாணவியரே தோ்ந்தெடுத்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.