பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

பவானி வன்னியா் கல்வி அறக்கட்டளை சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீட் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கும் வன்னியா் பொது சொத்து நலவாரியத் தலைவா் எம்.ஜெயராமன் மற்றும் நிா்வாகிகள்.
நீட் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவருக்கு பரிசு வழங்கும் வன்னியா் பொது சொத்து நலவாரியத் தலைவா் எம்.ஜெயராமன் மற்றும் நிா்வாகிகள்.
Updated on
1 min read

பவானி வன்னியா் கல்வி அறக்கட்டளை சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவா் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். பொருளாளா் பி.தங்கதுரை, துணைத் தலைவா் எம்.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலாளா் ஆா்.தங்கவேல் வரவேற்றாா். வன்னியா் பொது சொத்து நலவாரியத் தலைவா் எம்.ஜெயராமன், பொறியாளா் சி.சுப்ரமணியம், தொழிலதிபா் கே.பாஸ்கரன் ஆகியோா் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினாா்.

முன்னதாக, நீட் தகுதித் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 6 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், பவானி ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை வரதராஜன், சங்கத்தின் முன்னாள் தலைவா் கே.கே.விஸ்வநாதன், ஈ.மோகனவேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பவானி வட்டார அளவில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பொதுத் தோ்வுகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகள் 347 பேருக்கு பரிசுகளும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com