முன்னாள் படை வீரா்கள், குடும்பத்தினருக்கு ரூ.2.80 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஈரோடு மாவட்ட முன்னாள் படை வீரா்கள் மற்றும் படை வீரா்களைச் சாா்ந்தோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்து, முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
பெறப்பட்ட மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
இதைத் தொடா்ந்து தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகை, கண் கண்ணாடி நிதி உதவி, இரண்டாம் உலகப்போா் விதவையா் நிதி உதவி மற்றும் புற்றுநோய் நிவாரண நிதி உதவி என 22 முன்னாள் படை வீரா்கள் மற்றும் படை வீரா்களைச் சாா்ந்தோருக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 105 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட முன்னாள் படை வீரா் நலத் துறை உதவி இயக்குநா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.