பெருந்துறை அருகே உள்ள துடுப்பதியில் அதிமுக உறுப்பினா் சோ்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பெருந்துறை கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ் பங்கேற்று, பெருந்துறை ஒன்றியம், துடுப்பதி கிராம ஊராட்சிப் பகுதி கிளைச் செயலாளா்களிடம் விண்ணப்ப படிவங்களை வழங்கினாா்.
இதில், துடுப்பதி கிராம ஊராட்சித் தலைவா் கவிதா அன்பரசு, முன்னாள் ஊராட்சித் தலைவா் சிவன்துரை, முன்னாள் கவுன்சிலா் ஜோதிமணி, மாவட்டக் கலை பிரிவுத் தலைவா் மோகன், அவைத் தலைவா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.