

ஆடி பெளா்ணமியையொட்டி, சென்னிமலை முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
முன்னதாக, சென்னிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கிரிவலமாக வந்து முருகனை தரிசனம் செய்தனா்.
பெளா்ணமி நாட்களில் சென்னிமலை கோயிலைச் சுற்றி ஏராளமான பக்தா்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
அதன்படி, செவ்வாய்கிழமை அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். இதனால், கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
முருகப் பெருமானுக்கு காலை முதல் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.