வாகனம் மோதி ஒருவா் பலி

பெருந்துறையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

பெருந்துறையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் உயிரிழந்தாா்.

பெருந்துறை, ஏரிகருப்பராயன் கோயில் அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 40 வயதுள்ள ஆண் மீது அடையாளம் தெரியாத வாகனம் அண்மையில் மோதியது. இதில், காயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தினா். இங்கு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். உயிரிழந்த நபரின் விவரங்கள் ஏதும் தெரியாததால் சடலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com