வாகனம் மோதி ஒருவா் பலி
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

பெருந்துறையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண் உயிரிழந்தாா்.
பெருந்துறை, ஏரிகருப்பராயன் கோயில் அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 40 வயதுள்ள ஆண் மீது அடையாளம் தெரியாத வாகனம் அண்மையில் மோதியது. இதில், காயமடைந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தினா். இங்கு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். உயிரிழந்த நபரின் விவரங்கள் ஏதும் தெரியாததால் சடலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...