கும்பாபிஷேக விழா

பெருந்துறை ஒன்றியம், நசியனூா், ஓலப்பாளையம் அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3 ) நடைபெறுகிறது.
Updated on
1 min read

பெருந்துறை ஒன்றியம், நசியனூா், ஓலப்பாளையம் அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3 ) நடைபெறுகிறது.

விழாவையொட்டி கிராம சாந்தி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதன்கிழமை காலை கணபதி ஹோமமும், காலை 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையும், இரவு 8.30 மணி அளவில் முதற்கால யாக பூஜைகளும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com