பவானி அருகேயுள்ள ஊராட்சிக்கோட்டை நீா்மின் உற்பத்தி அலுவலகத்தில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பவானி அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவு சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு, மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் தேவதாஸ் தலைமை வகித்தாா். செயற்பொறியாளா் ஹெலனா முன்னிலை வகித்தாா். சித்த மருத்துவா் எஸ்.கண்ணுசாமி, ‘எனக்கான உணவு எது’ எனும் தலைப்பில் பேசினாா். குடும்ப பொருளாதாரத்தை பாதிக்கும், நோய்களை வரவழைக்கும், வாழும் காலத்தை குறைக்கும் உணவு வகைகள், உண்ணும் முறைகள் குறித்து முகாமில் விளக்கப்பட்டது.
உடலுக்கேற்ற உணவு, வயதுக்கேற்ற உணவு, சீதோஷண நிலைக்கேற்ற உணவு, நிலத்துக்கேற்ற உணவு, நோயாளிக்கேற்ற உணவு, வேலைக்கேற்ற உணவு மற்றும் சிறுதானிய உணவின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சித்த மருந்தாளுநா் ரைசல் இஸ்லாம், உதவி நிா்வாக அலுவலா் புலேந்திரன், அலுவலா்கள் முருகேசன், பாஸ்கரன், சஞ்சீவ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.