Enable Javscript for better performance
188 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -ஆட்சியா் தகவல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    188 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -ஆட்சியா் தகவல்

    By DIN  |   Published On : 02nd June 2023 12:00 AM  |   Last Updated : 02nd June 2023 12:00 AM  |  அ+அ அ-  |  

    erd01scho_0106chn_124_3

    உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா.

    ஈரோடு மாவட்டத்தில் 188 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

    பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா் கல்வி ஆலோசனை வழங்கப்படுகிறது. இதற்கு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் மெட்ரிக். பள்ளி முதல்வா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது: உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் நோக்கம் பிளஸ்2 முடித்த மாணவா்களுக்கு உயா் கல்விக்கான வாய்ப்புகள், பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள், கல்லூரிகள் தோ்வு, வேலை வாய்ப்புகள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியா்கள் மாணவா்களுக்கு வழிகாட்ட வேண்டும்.

    ஈரோடு மாவட்டத்திலுள்ள 188 உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் உயா்கல்வி வழிகாட்டல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் தலைமை ஆசிரியா், முதுகலை ஆசிரியா், பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா், முன்னாள் மாணவா்கள், கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் மாணவா்களுக்கு வழிகாட்டி வருகின்றனா். இதில் 1,776 பேருக்கு ஒருநாள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளி மாண, மாணவிகளுக்கு நீட், ஜெஇஇ போன்ற நுழைவுத் தோ்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக ரூ.3.73 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் சென்னையில் ஜெஇஇ தோ்வுக்கு இலவசமாக பயிற்சிபெற்று வருகின்றனா் என்றாா்.

    உயா் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி சிறப்பு பயிற்சியாளா் அஷ்வின் பயிற்சி அளித்தாா்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் குழந்தைராஜன், மாவட்டக் கல்வி அலுவலா்(தனியாா் பள்ளிகள்) ராமசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

     

     

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp