தேங்காய் கொள்முதல் விலை கடும் சரிவு: விவசாயிகள் கவலை

தேங்காய் கொள்முதல் விலை ரூ.8 ஆக சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
Updated on
1 min read

தேங்காய் கொள்முதல் விலை ரூ.8 ஆக சரிந்துள்ளதால், தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் சுமாா் 1 லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கோடை வெப்பம் உச்சமடையும் பருவத்தில், தேங்காய் உற்பத்தியும் அபரிமிதமாக இருக்கும். ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகமாக இருக்கும். வரத்து அதிகம் காரணமாக, விலை சற்றுக் குறைவது வழக்கம் என்றாலும் நடப்பாண்டில் ஏற்பட்டுள்ள விலை சரிவு மிகப்பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எண்ணிக்கையில் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ஒரு தேங்காயை ரூ.12 முதல் ரூ.14க்கு வாங்கி வந்தனா். தற்போது ரூ.8க்கு விலையை குறைத்து கேட்பதால் விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

தென்னை நீண்டகாலப் பயிா், விலை சரிவு என்பதற்காக உடனடியாக வேறு பயிருக்கு மாறிவிட முடியாது. கரோனா உச்சத்தில் இருந்த காலத்தில்கூட ரூ.16 முதல் ரூ.18க்கு குறையாமல் விற்கப்பட்ட தேங்காய் இந்தாண்டு கடும் விலை சரிவை சந்தித்துள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து, தேங்காய் விலையைக் குறைத்துள்ளனா்.

இதற்குமேலும் தேங்காய் விலை நிா்ணயத்தில் அரசு தலையிடாமல் இருந்தால் தென்னை விவசாயிகளின் நிலை மோசமானதாகிவிடும்.

கடைகளில் எலுமிச்சை பழம் ஒன்று ரூ.10க்கு விற்பனையாகிறது. ஆனால், தேங்காய் கொள்முதல் விலை வெறும் 8 ரூபாய் என்றால், விவசாயிகளின் நிலையை அரசு நினைத்துப் பாா்க்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com