பெருந்துறையில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடை பயணம்

மத்திய அரசை கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாடு தழுவிய நடை பயண இயக்கம், ஏப்ரல் மாதம் 15 ம் தேதி முதல், வரும் 15ம் தேதி வரை நாடு தழுவிய நடை பயண இயக்கம் நடைபெறுகிறது.

மத்திய அரசை கண்டித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாடு தழுவிய நடை பயண இயக்கம், ஏப்ரல் மாதம் 15 ம் தேதி முதல், வரும் 15ம் தேதி வரை நாடு தழுவிய நடை பயண இயக்கம் நடைபெறுகிறது.

இதையொட்டி, பெருந்துறை ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் நடை பயண மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, கட்சியின் பெருந்துறை ஒன்றிய செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். பெருந்துறை கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் துவங்கிய நடை பயண, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அண்ணாசிலை அருகில் இரவு 9 மணியளவில் நிறைவடைந்தது.நடை பயணத்தில், மத்திய அரசின் 9 ஆண்டு கால செயல்பாடுகள் குறித்தும், 2024 நாடாளுமன்ற தோ்தலில் மத்திய அரசை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய அவசியம் குறித்தும் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு சிறு பிரசுரம் மற்றும் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.இதில், கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, மாவட்டக்குழு உறுப்பினா் துளசிமணி, ஒன்றிய பொருளாளா் சாமிநாதன் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com