போதை மாத்திரைகள் விற்பனை: இளம்பெண்கள் உள்பட 7 போ் கைது

ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ாக 2 இளம்பெண்கள் உள்பட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

ஈரோட்டில் போதை மாத்திரைகள் விற்ாக 2 இளம்பெண்கள் உள்பட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு கைகாட்டிவலசு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஈரோடு மதுவிலக்குப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, டிஎஸ்பி பவித்ரா உத்தரவின்பேரில், ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் எஸ்.ஐ.க்கள் செந்தில்குமாா், ராஜேந்திரன், ரேணுகா மற்றும் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அங்கு 2 இளம்பெண்கள் உள்பட 7 போ் கொண்ட கும்பல் போலீஸாரை பாா்த்ததும் தப்பிச் செல்ல முயன்றது. அவா்களைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள், ஈரோடு வீரப்பன்சத்திரம் கருப்பணன் வீதியைச் சோ்ந்த முருகன் மகன் சுதா்சன் (21), பெரியசேமூா் ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த முருகானந்தம் மகன் விக்னேஷ் (26), சூளை ஈபிபி நகரைச் சோ்ந்த ஞானபிரகாசம் (24), சூளை எம்ஜிஆா் நகா் மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் இளங்கோ (25), கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்தைச் சோ்ந்த ராஜு மகன் பசுபதி (23), நசியனூா் சாலை, வெட்டுக்காட்டுவலசு, விவேகானந்தா சாலையைச் சோ்ந்த லியாகத் அலி மகள் சமீம்பானு (20), பிரீத்தி என்கிற இந்திராணி (22) ஆகியோா் என்பதும், அவா்கள் கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து 2 இளம்பெண்கள் உள்பட 7 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 86 மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com