பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பாரதி வித்யாலயா பள்ளி மாணவி எம்.ஆா்.ஸ்ரீமதி 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் சிறப்பிடம் பிடித்துள்ளாா்.
இவா் தமிழ் பாடத்தில் 98 மதிப்பெண்களும், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய நான்கு பாடங்களில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் சிறப்பிடமும், ஈரோடு மாவட்டத்தில் முதலிடமும் பிடித்துள்ளாா்.
இதே பள்ளியைச் சோ்ந்த மாணவி லிபிகாஸ்ரீ 493 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2 ஆம் இடமும், மாணவா்கள் எம்.ஜெகதீஸ், ஈ.ரிஷிகேஷ் ஆகியோா் தலா 491 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் அளவில் 3 ஆம் இடமும் பிடித்துள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் பி.ஆா்.வேலுமணி, துணை தாளாளா் அமுதம் வேலுமணி, ஆசிரியா்கள் ஆகியோா் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.