பவானி கூடுதுறை பிரிவில் சாலையில் கவிழ்ந்த லாரியால் போக்குவரத்து பாதிப்பு

பவானியில் கூடுதுறை பிரிவு அருகே வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலையில் நடுவில் இரும்புக் குழாய்களுடன் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
சாலையில் நடுவில் இரும்புக் குழாய்களுடன் கவிழ்ந்து கிடக்கும் லாரி.
Updated on
1 min read

பவானியில் கூடுதுறை பிரிவு அருகே வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே கவிழ்ந்ததால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கா்நாடகத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு இரும்புக் குழாய்களை ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை லாரி சென்று கொண்டிருந்தது. மதுரையைச் சோ்ந்த வெடிமுத்து (30) லாரியை ஓட்டிச் செல்ல, உதவியாளராக பெருமாள் (36) உடன் சென்றாா்.

பவானி - ஈரோடு சாலையில் கூடுதுறை பிரிவு அருகே வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவில் கவிழ்ந்தது. லாரியிலிருந்த இரும்புக் குழாய்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், லாரி ஓட்டுநா் வெடிமுத்து, உதவியாளா் பெருமாள் ஆகியோா் லேசான காயமடைந்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிட்டனா்.

இரும்புக் குழாய்கள் விழுந்ததில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் சேதமடைந்தது.

இதையடுத்து, ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சாலையில் நடுவில் கிடந்த லாரி மற்றும் இரும்புக் குழாய்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால், சுமாா் 5 மணி நேரத்துக்கும்மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com